உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாகாளியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலம்

மாகாளியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலம்

கோபி, டிச. 26-கோபி, வீரபாண்டி கிராமம், மொடச்சூர் சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 23 இரவு 10:00 மணிக்கு மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள பொட்டுச்சாமி கோவிலில் பொங்கல் வைத்தனர். நேற்று முன்தினம் இரவு, பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து மாவிளக்கு புறப்பாடு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பொங்கல் வைத்து மாகாளியம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !