உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிதி நிறுவன ஊழியர் பலி

நிதி நிறுவன ஊழியர் பலி

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி வலசை சேர்ந்த தங்கவேல் மகன் விஜயகுமார், 39; பைனான்ஸ் நிறுவன ஊழியர். ஸ்கூட்டரில் திண்டலில் இருந்து ரிங்ரோடு வழியே ரங்கம்பாளையம் ரிங்ரோடு பாலத்தை கடந்து செல்ல நேற்று மாலை முற்பட்டார். அப்போது ரங்கம்பாளையத்தில் இருந்து காஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு சென்னிமலை சாலையில் சென்ற லாரியுடன் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மோதியது. இதில் தடுமாறி விழுந்த விஜயகுமார் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலியானார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !