ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தீ விபத்து
பவானி:சித்தோடு ஆவின் பால் பண்ணை வளாகத்தில், கால்நடைகளுக்காக, 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கால்நடை தீவன பயிர்களில், நேற்று மதியம் தீ பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பவானி, ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து, மூன்று தீயணைப்பு வாகனங்களில், வீரர்கள் வந்தனர். அவர்கள், 1 ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல்போர் எரிந்து சாம்பலானது.