உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கிரீன் பார்க் 100 சதவீத தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கிரீன் பார்க் 100 சதவீத தேர்ச்சி

ஈரோடு :ஈரோடு குப்பக்கவுண்டன்பாளையம் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றனர். மாணவி அபிநயாஸ்ரீ, 483 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி கேஷிகா, 479 எடுத்து இரண்டாமிடம், மாணவி காவியா, 478 பெற்று மூன்றாமிடம் பெற்றனர். சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளர் சுப்ரமணியன், பள்ளி முதல்வர் ராஜ்குமார் பாராட்டி கேடயம் வழங்கினர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 450 மதிப்பெண்களுக்கு மேல், 12 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 23 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல், 34 பேரும் பெற்றுள்ளனர். 2025-26ம் கல்வியாண்டிற்கான எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ