உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு ப.செ.பார்க்கில் பசுமை பந்தல் அமைப்பு

ஈரோடு ப.செ.பார்க்கில் பசுமை பந்தல் அமைப்பு

ஈரோடு:ஈரோடு ப.செ.பார்க்கில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.ஈரோட்டில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில், தனியார் பங்களிப்புடன் கலெக்டர் அலுவலக முன்புறம், சிக்னல் அருகே பசுமை பந்தல் இரு தினங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. நேற்று ஈரோடு ப.செ.பார்க்கில் திருமகன் ஈவேரா சாலை, எம்.எஸ். சாலை ஆகிய இரு பகுதிகளில் சிக்னல் முன்புறம், பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் காந்திஜி சாலையில் பசுமை பந்தல் அமைக்கப்படவில்லை. சாலையில் ஒரு பகுதியில் மட்டும் பசுமை பந்தல் அமைத்து விட்டு, மற்றொரு சாலையை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை