ரூ.2.98 கோடியில் உயர்மட்ட பாலம்
அந்தியூர்:அந்தியூர் யூனியன் வேம்பத்தி ஊராட்சி மாரிகவுண்டனுாரில் உயர்மட்ட பாலம் கட்ட, மாநில மூலதன நிதியில், 2.௯௮ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்வில் அந்தியூர் பி.டி.ஓ., சரவணன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.