உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள் விளையாட்டரங்கம் சிவன்மலையில் திறப்பு

உள் விளையாட்டரங்கம் சிவன்மலையில் திறப்பு

காங்கேயம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள சிறு உள் விளையாட்டு அரங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இது, 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. சிவன்மலையில் நடந்த விழாவில், ஈரோடு எம்.பி., பிரகாஷ், காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை