உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பகல் நேர சூரிய மின்னாற்றலை பயன்படுத்த வலியுறுத்தல்

பகல் நேர சூரிய மின்னாற்றலை பயன்படுத்த வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 18-பகலில் இலவசமாக கிடைக்கும், புதுப்பிக்கப்பட்ட இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.இதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதுடன், மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டை குறைக்கலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, பகலில் அதிகமாக தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து விவசாயிகளும் இயன்றவரை தங்கள் விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டும் என, மின்வாரிய செய்திக்குறிப்பில் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை