த.மா.கா., உறுப்பினர் அட்டை வழங்கல்
தாராபுரம், தமிழ் மாநில காங்., கட்சி சார்பில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர் செந்தில்குமார் முன்னிலையில், கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சக்தி கலாதேவி, விக்னேஷ், வெற்றிவேல், குமார், வேல்முருகன் உட்பட்ட பலர் பங்கேற்றனர்.