உச்சத்தில் மல்லிகை பூ விலை கிலோ ரூ.4,740க்கு விற்பனை
புன்செய்புளியம்பட்டி:தை மாத முகூர்த்த சீசன் காரணமாக புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரே நாளில், 1,840 ரூபாய் விலை உயர்ந்து கிலோ, 4,740 ரூபாய்க்கு விற்பனையானது.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. முகூர்த்த சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூ தேவை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ, 2,900 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று, 1,840 ரூபாய் விலை உயர்ந்து, 4,740 ரூபாய்க்கு விற்பனையானது.இதேபோல் முல்லை கிலோ, 2,140 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் நேற்று, 2,840 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ, 220 ரூபாய்க்கும், காக்கடா பூ, 1,375 ரூபாய்க்கும் விற்பனையானது.