உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் இன மாடுகள்;ரூ.6 லட்சத்துக்கு விற்பனை

காங்கேயம் இன மாடுகள்;ரூ.6 லட்சத்துக்கு விற்பனை

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். இடைத்தரகர் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலை பேசி வாங்கினர். நேற்றைய சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 24 கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 58 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 15 கால்நடைகள் ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி