குவாரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தெர்மல் டிரோன் மூலம் கண்காணிப்பு
சென்னிமலை, :சென்னிமலை காப்புக் காட்டை ஒட்டிய பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக வனத்துறை நேற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.சென்னிமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் செயல்படாத கல் குவாரிகளில் சிறுத்தை பதுங்கி உள்ளதா என்பதை கண்காணிக்க தெர்மல் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர். ஆனாலும், இதில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய முடியவில்லை.