மேலும் செய்திகள்
மண் கடத்திய 2 பேர் கைது மினி லாரிகள் பறிமுதல்
23-May-2025
கோபி, கோபி அருகே உக்கரம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த இரு டிப்பர் லாரிகளை சோதனை செய்தபோது, தலா இரண்டரை யூனிட் கிராவல் மண் இருந்தது. ஆனால், உரிய அனுமதி இல்லை. இதனால் டிரைவர்களான ரங்கசாமி, 50, பிரசாத்தை, 45, கைது செய்தனர். லாரி உரிமையாளரான குப்பந்துறையை சேர்ந்த வைத்தீஸ்வரனை தேடி வருகின்றனர். கிராவல் மண்ணுடன் டிப்பர்களை பறிமுதல் செய்தனர்.
23-May-2025