உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய லாரி

பர்கூர் மலைப்பாதையில்விபத்தில் சிக்கிய லாரி

அந்தியூர்;கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து சேலத்துக்கு கிரானைட் கற்கள் ஏற்றிய லாரி, பர்கூர் மலைப்பாதை வழியாக வந்தது. சாம்ராஜ் நகரை சேர்ந்த சலீம் பாய், 37, ஓட்டினார். கிளீனரா இம்ரான், 30, வந்தார். நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லையான கர்கேகண்டியிலிருந்து பர்கூர் நோக்கி பெரியமலை சுற்று வேலாம்பட்டி 'வியூ பாயிண்ட்' அருகே மலைப்பாதையில் வந்தது. அப்போது 'ஆக்சில்' கட்டாகி இடது பக்க பள்ளத்தில் உருண்டது. லாரியிலிருந்து இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்து தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !