குடிநீர் பிரச்னை குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை
பவானிசாகர்; பவானிசாகர் யூனியனுக்கு உட்பட்ட 15 பஞ்.,களில் பல்வேறு கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடு-பட்டு வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து, சிறப்பு ஆய்வு கூட்டம், பவானிசாகர் யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஓ., செந்தில்-குமார் தலைமையில் நேற்று நடந்தது. பவானி-சாகர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார்.சீரான குடிநீர் வினியோகத்துக்கான நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்-தினார். கூட்டத்தில், 15 பஞ்.,களின் செயலாளர்-களும் கலந்து கொண்டனர்.