சத்துணவு - அங்கன்வாடி ஊழியர் தொடர் தர்ணா
ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 10வது நாளாக தர்ணா போராட்டம் நேற்றும் நடந்தது. ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில அளவில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.