உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு: சென்னிமலை அருகே ஈங்கூர் சாலை, திருமுகமலர்ந்தபுரத்தை சேர்ந்த மக்கள் பழனிசாமி, பாரதி, சங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: ஏற்க-னவே, மூன்று மொபைல் டவர் செயல்படுகிறது. தற்போது 'ஏர்டெல்' டவர் அமைக்க ஆயத்தப்பணி நடந்து வருகிறது. இதனால் அதிகமான கதிர்வீச்சு இருக்கும். சுற்றுச்சூழல், மக்கள், பறவைகள் பாதிக்கும். மக்கள் இல்லாத பகுதியில் டவர் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !