உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்; 298 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்; 298 பேர் ஆப்சென்ட்

ஈரோடு: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10,976 மாணவர்கள், 12,331 மாணவியர், தனித்தேர்வர் என, 23,021 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதில், 22,723 பேர் மட்டுமே பங்கேற்றனர். 298 பேர் ஆப்சென்ட் ஆகினர். 109 தேர்வு மையம், 7 தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடு மற்றும் ஒழுங்கீன நடவடிக்-கைகளை தடுக்க 177 பேர் கொண்ட பறக்கும் படை குழு அமைக்-கப்பட்டிருந்தது. இக்குழுவினர் மாவட்டம் முழுக்க திடீர் ஆய்வு செய்தனர். தேர்வு விடைத்தாள் அந்தியூர் மங்களம் பள்ளி, கோபி அமலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஈரோடு கார்மல் பள்ளி, கிறிஸ்து-ஜோதி பள்ளிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலைமகள் கல்வி நிலயைம் மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவ-ருடன் முதன்மை கல்வி அலுவலர் மான்விழி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை