உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் தனியார் பள்ளிகள் அபாரம்

தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் தனியார் பள்ளிகள் அபாரம்

தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் தனியார் பள்ளிகள் அபாரம் ஈரோடு, டிச. 25-பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக பிளஸ் 1 மாணவ--மாணவிகளுக்கு, தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்வு அக்.,19ல் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும், 9,168 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த, 27 பேரும்; தனியார் பள்ளிகளில், 52 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் முதன் முறையாக தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக, 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ