உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடியிருப்பு பகுதி பாதுகாப்பிற்கு சிசிடிவி பொருத்த கோரிக்கை

குடியிருப்பு பகுதி பாதுகாப்பிற்கு சிசிடிவி பொருத்த கோரிக்கை

பள்ளிப்பாளையம்:காவிரி சுற்றுவட்டார குடியிருப்பு பகுதி பாதுகாப்பிற்கு, 'சிசிடிவி' கேமரா பொருத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் சுற்றிலும் ஏராள-மான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில், கடந்த சில மாதங்களாக இரவில் அடையாளம் தெரியாத நபர்-களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், திருட்டு, வழிப்-பறி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகு-தியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், ஏதாவது குற்றச்செ-யல்கள் நடந்தால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகி-றது. சீக்கில் ஏற்படும்.எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, காவிரி சுற்று வட்டார குடி-யிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்க, பள்ளிப்பா-ளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ