உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெறுங்கையுடன் வீடு செல்லும் ஓய்வு அரசு போக்குவரத்து ஊழியர்

வெறுங்கையுடன் வீடு செல்லும் ஓய்வு அரசு போக்குவரத்து ஊழியர்

காங்கேயம்: காங்கேயத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் நேற்று கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., காங்கேயம் கிளை தலைவர் விஸ்-வநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் மண்டல பொது செய-லாளர் செல்லத்துரை சிறப்புரையற்றினார்.பணி ஓய்வு பெறும் போக்குவரத்து ஊழியர், வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வுகால பலன் எப்போது கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இதில்லாமல் ஓய்வூதியர்களுக்கு எட்டாண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்-வூதிய திட்டத்தை ரத்து செய்யவும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு-வார்த்தையை பேசி முடிக்கவும் வரும் டிச.,12ம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன், மாபெரும் தர்ணா போராட்டம் நடக்க-வுள்ளது என்று கூட்டத்தில் தெரிவித்தனர். கூட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் முருகையா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு துரைசாமி உள்பட, 50க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !