வருவாய் துறை அலுவலர் 3வது நாளாக போராட்டம்
வருவாய் துறை அலுவலர்3வது நாளாக போராட்டம்ஈரோடு, நவ. 29-பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், மூன்றாவது நாளாக நேற்றும் பணி புறக்கணிப்புடன், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் ரமேஷ், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் வட்ட கிளை செயலாளர் இத்திரியாஸ் தலைமை வகித்தனர்.