உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ம.க., கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் பறிமுதல்

பா.ம.க., கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, பறக்கும் படை-யினர் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். ஈரோடு, குமலன்-குட்டை பகுதியில் ஒரு காரில் சோதனையிட்டனர். காரில் வந்தவ-ரிடம், 1 லட்சத்து, 22,000 ரூபாய் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லை. காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது கள்-ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த பா.ம.க, கவுன்-சிலர் பப்லு உட்பட மூன்று பேர் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் வார்டு மக்கள், நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக புத்-தாடை வாங்க ஈரோடு வந்தது தெரியவந்தது. ஆனாலும் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் உத்தரவுப்படி, கருவூலத்தில் செலுத்-தினர். இதுவரை, 4 லட்சத்து, 52,860 ரூபாய் பறிமுதல் செய்யப்-பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ