கொண்டத்து காளியம்மனுக்குசந்தனக்காப்பு அலங்காரம்
கொண்டத்து காளியம்மனுக்குசந்தனக்காப்பு அலங்காரம் கோபி, கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா தற்போது நடந்து வருகிறது. வரும், 9ம் தேதி தீ மிதி விழா கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு, இளநீர், பால், தயிர், கரும்பு பால், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மூன்று கிலோ சந்தனத்தை கொண்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.