உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு

துாய்மை தொழிலாளர்களின் 8 நாள் போராட்டம் முடிவு

பவானி: பவானி நகராட்சியில் துாய்மை பணியில், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர், 73 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தொழி-லாளர் நலத்துறை நிர்ணயித்த, 649 ரூபாய் தினக்கூலி வழங்கப்ப-டவில்லை. இந்த கோரிக்கையில் வலியுறுத்தி எட்டு நாட்களாக நகராட்சி அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன், நகராட்சி கமி-ஷனர் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், தற்போது தரும் சம்பளத்துடன், 10 சதவீதம் சேர்த்து தருவதாக கூறினார். இதை தொடர்ந்து துாய்மை தொழி-லாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக கூறினனர். நாளை (இன்று) முதல் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ