உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொசு ஒழிப்பு பணியில் துாய்மை பணியாளர்கள்

கொசு ஒழிப்பு பணியில் துாய்மை பணியாளர்கள்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளுக்கு உட்பட்ட வளையர்பாளையம், கிழக்கு காலனி ஆகிய பகுதிகளில், மழை காலங்களில் பரவும் கொசுக்களை தடுக்கும் வகையில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் பழைய டயர்கள் அகற்றுதல், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டன. மேலும் குடிநீர் தொட்டி பராமரிப்பு, நல்ல குடிநீர் மூடி வைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி