மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் மிதமான மழை
30-Sep-2024
ஈரோடு: ஈரோட்டில் எஸ்.பி., அலுவலக நுழைவு பகுதி கதவை ஒட்டி, காய்ந்த நிலையில் ஒரு மரம் இருந்தது. மின் கம்பியில் மரத்தின் கிளை அடிக்கடி மோதுவதால் மின் தடை ஏற்பட்டு வந்தது. சீரான மின் சப்ளைக்காக இடையூறாக உள்ள மரத்தை, நேற்று முன்தினம் வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. கயிற்றை கட்டி மரத்தை இழுத்தபோது முறிந்து, காம்பவுண்ட் சுவர் மீது விழுந்தது. இதில் கதவு பகுதி சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. அலுவலக நுழைவு பகுதி போர்டும் வளைந்து விழுந்-தது. இதை உடனடியாக சரி செய்யும் பணி நடந்தது. காம்-பவுண்ட் சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது.
30-Sep-2024