உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூதாட்டி சாவில் சந்தேகம்; உறவினர் புகார்

மூதாட்டி சாவில் சந்தேகம்; உறவினர் புகார்

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அடுத்த வடவள்ளி வேடர் நகரை சேர்ந்தவர் கண்ணம்மாள், 75; இவரது கணவர் இறந்து விட்டார். குழந்தை இல்லாத நிலையில் தம்பி சீனிவாசன் பராமரிப்பில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு கண்ணம்மாள் இறந்து விட்டதாக, உறவினர்களுக்கு சீனிவாசன் தகவல் தெரிவித்தார். உறவினர்கள் சென்றபோது கண்ணம்மா தலையில் ரத்த காயம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்து சத்தி போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !