உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மழைநீர் வடியாததால் தவிப்பு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மழைநீர் வடியாததால் தவிப்பு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 59.40 மி.மீ., மழை பெய்தது.இதேபோல் பவானியில்-12.80, கவுந்தப்பாடி-51.40, கோபி-8.30, எலந்தகுட்டை மேடு-7.20, கொடிவேரி அணை-2, குண்டேரிபள்ளம் அணை-11.80, பவானிசாகர் அணை பகுதியில்-1.40 மி.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் பெய்த மழையால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் புக்கிங் கவுன்டர் முன்புறம் மழை நீர் தேங்கியது. நேற்று காலையிலும் மழை நீர் வடியவில்லை.இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். நேரம் செல்ல செல்ல அதுவே வடிய தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை