உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது

பவானி, அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவில், அம்மாபேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்பிளண்டர் மற்றும் மொபட்டில் வந்த இருவரிடம் சோதனை செய்தனர். இதில் ஹான்ஸ், குட்கா என, 9 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் சேலம் மாவட்டம் குமாரபாளையம் கல்லாங்கரடு பகுதி சக்திவேல்,32; சித்தார் பகுதி முனியசாமி, 50, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பைக் மற்றும் மொபட்டுடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ