பவானி ஆற்றில் மணல் திருடிய இருவர் கைது
பவானி:பவானி அருகே ஜம்பை டவுன் பஞ்., மசூதி வீதி அருகே பவானி ஆற்றில் மணல் திருட்டு நடப்பது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் பவானி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த ஜம்பை பழனிச்சாமி, 55, தங்கராசு, 45, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 28 மூட்டை மணல், டாட்டா ஏஸ் வாகனம் மற்றும் 2 மொபட்டுகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.