வாந்திபேதி - மர்ம காய்ச்சல் மலை கிராமத்தில் அவதி
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில், 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கூட்டார் தொட்டியில், 15 பேர், ஒசப்பாளையத்தில், 10 பேர் நேற்று முன்தினம் முதல் வாந்தி-பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.