உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு 1,900 கன அடியாக குறைப்பு

கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு 1,900 கன அடியாக குறைப்பு

புன்செய் புளியம்பட்டி, டிச. 26-பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, 2,300 கன அடியில் இருந்து, 1,900 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, 1,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதேசமயம் அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 98.58 அடி; நீர் இருப்பு, 27.6 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 628 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ