உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

ஈரோடு: கொடுமுடி, தாமரைபாளையம் முத்தையன்வலசை சேர்ந்தவர் கந்தகுமார், 44, விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். கடந்த 9ம் தேதி காலை கம்மங்காட்டு களம் நல்லசிவம் தோட்டத்தில், குச்சிக்கி-ழங்கு காட்டிற்கு மருந்து அடித்து கொண்டிருந்தார். அப்போது, இடது கால் பாதத்தை பாம்பு தீண்டியது. உடனே அவரை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கிசிச்சை பலனின்றி கடந்த, 10ம் தேதி இறந்தார். கொடுமுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி