உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மோதியதில் தொழிலாளி பலி

கார் மோதியதில் தொழிலாளி பலி

ஈரோடு:ஈரோடு வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 45, திருமணம் ஆகாதவர். மர வேலை செய்பவர். ஈரோடு-நசியனுார் சாலையில் வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே, சாலையோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த கார் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தியதாக, காரை ஓட்டி வந்த கவுதம் மீது, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை