உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறு; 6 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு; 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே முன்விரோத தகராறில் இரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த பெருமங்கலம் சேர்ந்தவர் சத்தியன்தாஸ்,42; இவரது உறவினர் செல்வராஜ்,57; இவர்களுக்கு இடையே பொது பாதை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கடந்த 2 ம் தேதி இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.இது குறித்த இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் செல்வராஜ், சிவா, தமிழ்செல்வி, கனகம்மாள் மற்றொரு தரப்பில் சத்தியன்தாஸ், செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை