உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது இடத்தில் மது அருந்திய 15 பேர் மீது வழக்கு

பொது இடத்தில் மது அருந்திய 15 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி பகுதியில் பொது இடத்தில் மது அருந்தும் நபர்களால் வீண் தகராறு, வாகன விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு, பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்தனர். அதன்படி, கீழ்குப்பம் போலீஸ்ஸ்டேஷனில் 2 பேர், தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் 3 பேர் மற்றும் வரஞ்சரம் போலீஸ்ஸ்டேஷனில் 10 பேர் என மொத்தமாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை