உள்ளூர் செய்திகள்

உலக தாய்மொழி தின விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக தாய்மொழி தினத்தையொட்டி, தமிழ் இலக்கிய பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜீசஸ்சுஜி உரையாற்றினார். ஆசிரியர் ஷகிலா வரவேற்றார். மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, பாடல், நடன போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உலகநாதன், கனிமாலதி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி லேகாஸ்ரீ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ