உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி டெம்போ கவிழ்ந்து விபத்து

மினி டெம்போ கவிழ்ந்து விபத்து

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே அதிவேகத்தில் சென்ற மினி டெம்போ சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியை சேர்ந்தவர் மாயபெருமாள் 33. டிரைவர். இவர் நேற்று, மினி டெம்போவில் உரம் மற்றும் மருந்துகளை ஏற்றிக்கொண்டு, திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.காலை 11:10 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் அருகில் அதிவேகத்தில் சென்ற போது, மினி டெம்போ, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.இதில் வாகனத்தில் இருந்த, ரூ. 2 லட்சம் மதிப்பிலான உரம் மற்றும் மருந்து பொருட்கள் சாலையில் சிதறின. இதில் டிரைவர் மாயபெருமாள் காயங்கள் இன்றி, உயிர் தப்பினார். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ