உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடர் மழை நிரம்பும் ஏரிகள்

தொடர் மழை நிரம்பும் ஏரிகள்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.சங்கராபுரம் பகுதியில் சில தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சங்கராபுரம் பகுதியில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பினர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலை பகுதியில் 1 மணி நேரம் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் சங்கராபுரம், பூட்டை, தியாகராஜபுரம், பொய்குனம், நெடுமானுார் ஆகிய கிராம ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி