உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பகுதியில் மழை; ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சங்கராபுரம் பகுதியில் மழை; ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்கள் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சங்கராபுரம் பகுதியில் உள்ள கிராம ஏரிகள் நிரம்பி வருகிறது.கடந்த 2 நாட்களுக்கு முன் சங்கராபுரம் பகுதியில் 2 நாட்கள் மின்னல், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. கல்வராயன்மலையில் பெய்த கன மழையால் மணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பூட்டை, சங்கராபுரம், தியாகராஜபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை