திருக்கோவிலுார் கல்லுாரியில் ரக் ஷா பந்தன்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் ரக் ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். பிரம்மா குமாரிகள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் சிறப்புரையாற்றினார்.அமைப்பின் சகோதரிகள், மாணவ, மாணவியர்களுக்கு ராக்கி கயிறு கட்டினர். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.