உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற ஆசாமி கைது

மதுபாட்டில் விற்ற ஆசாமி கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவரை கைது செய்து, வங்கி கணக்கினை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீலமங்கலம் நரிகுறவர் காலனியை சேர்ந்தவர் பால்துரை மகன் விஜய்,37; என்பவர் வீட்டில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து விஜயினை கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விஜயின் வங்கி கணக்கினை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி