மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற ஆசாமி கைது
07-Sep-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நகர பகுதியில் உள்ள கவரிங் கடையில், எம்.ஆர்.என்., நகரைச் சேர்ந்த சென்னிகிருஷ்ணன் மனைவி லட்சுமி, 48; சென்னிகிருஷ்ணன், 53; செம்பராம்பட்டு மூர்த்தி மனைவி சந்திரலேகா, 32; மற்றும் சரவணன் ஆகியோர் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிந்து லட்சுமி, சென்னிகிருஷ்ணன், சந்திரலேகா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.3,400 மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும்.17 ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
07-Sep-2024