உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அடிப்படை எழுத்தறிவு தேர்வு மாவட்டத்தில் 31,272 பேர் பங்கேற்பு

 அடிப்படை எழுத்தறிவு தேர்வு மாவட்டத்தில் 31,272 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,723 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும்,15 வயதுக்கு மேற்பட்ட படிக்க, எழுத தெரியாத நபர்களை கண்டறியும் பணி கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதன்படி, மாவட்டம் முழுதும் கண்டறியப்பட்ட 31,272 பேருக்கும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. அடிப்படை எழுத்துக்கள் அறிதல், எண்களை அறிதல், எழுத்துக்களை கூட்டி படித்தல் தொடர்பாக 6 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று நடந்தது. மாவட்டம் முழுதும் 1,723 மையங்களில் நடந்த தேர்வினை 31,272 பேர் எழுதினர். வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதம் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டு, விடைத்தாள் சேகரிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள் திருத்தும் பணி 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்படும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெரியமாம்பட்டு மற்றும் காந்தி நகர் அரசு பள்ளிகளில் நடந்த எழுத்தறிவு தேர்வினை சி.இ.ஓ., கார்த்திகா பார்வையிட்டு ஆய்வு செ ய்தார். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ