உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்; புகாருக்கு உதவி மையம்

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்; புகாருக்கு உதவி மையம்

கள்ளக்குறிச்சி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியனருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனை வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர், வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதற்காக 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா எண்ணில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக பணி நேரத்தில் புகார்களை பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி