உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவி இறந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

பள்ளி மாணவி இறந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி பள்ளி மாணவி இறந்த வழக்கின் விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி் விடுதியில் தங்கி பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.மாணவியின் தாய் செல்வி புகாரின் பேரில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், கடந்த 2023ம் ஆண்டு மே 15ம் தேதி 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இதில் ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் தாய் செல்வி தொடர்ந்த வழக்கு, நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி