உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம்

நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.நடராஜருக்கு ஆண்டிற்கு 6 தினங்கள் மட்டுமே மகா அபிஷேகம் நடக்கும். அதில் ஒன்று ஆனி திருமஞ்சனம். நேற்று முன்தினம் மாலை திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க நடராஜர் சபையில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை, விழா மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதி உலா, கோவில் வளாகத்தில் திருவூடல் வைபவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை