உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

மத்திய அரசால் செயல்படுத்த உள்ள பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் பதிவு செய்து விண்ணப்பித்தினை புதுப்பித்துக்கொள்ளலாம்.60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் தேசிய கல்வி உதவித் தொகைத் தளத்தில் தங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் கூடுதல் விபரங்கள் அறிந்திட (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை