உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தரமான தங்க நகை வாங்க சஞ்சய் ஜுவல்லரி

தரமான தங்க நகை வாங்க சஞ்சய் ஜுவல்லரி

திருக்கோவிலூரில் நியாயமான விலையில் தங்க நகைகள் வாங்க சஞ்சய் ஜுவல்லரி சிறந்த ஸ்தாபனமாக செயலாற்றி வருகிறது என அதன் உரிமையாளர் கோல்டுரவி கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.திருக்கோவிலூர், கட்டகோபுர வீதி, பெருமாள் கோவில் எதிரில், சஞ்சய் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடையை நடத்தி வருகிறோம். தங்க நகைகள் வாங்குவதில் அதன் தரம் முக்கிய பங்காக உள்ளது. பாமர மக்களும் அதன் தரத்தை புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறி விற்பனை செய்து வருகிறோம். 916 கே.டி.எம்., நகைகள் குறைந்த சேதாரத்துடன், செய்கூலி இல்லாமல் விற்பனை செய்கிறோம்.திருமணம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுப விசேஷங்களுக்கு மொத்தமாக நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்குகிறோம். அதிக லாப நோக்கமற்ற எங்களின் சேவையை புரிந்து கொண்டிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆதரவால் குறைந்த லாபத்திற்கு தரமான நகைகளை விற்பனை செய்ய முடிகிறது. மக்களின் சேவைக்கான மற்றொரு அங்கமாக திருக்கோவிலூர் நகர மன்ற 17 வது வார்டு உறுப்பினராகவும் இருப்பதால், மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பும் கிட்டி இருக்கிறது. இதன் மூலம் வார்டு மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுப்பதுடன், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து வருகிறேன். நம்பிக்கை, நாணயம், கைராசி என்ற தாரக மந்திரத்துடன் சஞ்சய் ஜுவல்லரி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அதுபோல், நகர மன்ற உறுப்பினர் என்ற நிலையில் மக்களின் அன்பை பெற்றிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது எனக் கூறினார் கடையின் உரிமையாளர் கோல்டுரவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ